search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்டவாள விரிசல்"

    • தண்டவாள இணைப்பில் விரிசலால் விபத்தில் இருந்து ரெயிலை காப்பாற்றிய பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • இதுகுறித்து ராஜபாளையம், சங்கரன்கோவில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மதுரை

    சிவகாசி ரெயில் பாதை பராமரிப்பு பணியாளர் சுபா. இவர் கடந்த மாதம் ராஜபாளையம்-சங்கரன்கோவில் இடையே வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ரெயில் பாதை இணைப்பு பகுதியில் விரிசல் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ராஜபாளையம், சங்கரன்கோவில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில், ராஜபாளையத்தில் நிறுத்தப்பட்டது.

    அதேபோல மணப்பாறை-கொளத்தூர் இடையே 'கீ மேன்' ஆக உள்ள வளர்மதி, ரெயில் பாதையில் விரிசலை கண்டுபிடித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார். மதுரையில் நடந்த பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் மேற்கண்ட 2 பெண் ஊழியர்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, முதுநிலை பொறியாளர்கள் நாராயணன், பிரவீனா, ஹிருதயேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×